யாழ்.தெல்லிப்பழை வைத்தியசாலையில் பணியாற்றும் மருத்துவர் வீட்டை உடைத்து கொள்ளை..! பட்டப்பகலில் நடந்த துணிகரம்..

ஆசிரியர் - Editor I
யாழ்.தெல்லிப்பழை வைத்தியசாலையில் பணியாற்றும் மருத்துவர் வீட்டை உடைத்து கொள்ளை..! பட்டப்பகலில் நடந்த துணிகரம்..

யாழ்.கோண்டாவில் பகுதியல் உள்ள மருத்துவர் ஒருவருடைய வீடு உடைக்கப்பட்டு 8 பவுண் தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. 

குறித்த சம்பவம் நேற்றுமுன்தினம் பிற்பகல் இடம்பெற்றிருக்கின்றது. கோண்டாவில் - இராசமாணிக்கம் மண்டபத்திற்கு முன்பாக உள்ள வீட்டில் இந்த கொள்ளை சம்பவம் இடம்பெற்றுள்ளது. 

தெல்லிப்பழை வைத்தியசாலையில் கடமையாற்றும் குறித்த வைத்தியர் வீட்டிலிருந்தவர்கள் பிற்பகல் 2 மணிக்கு வீட்டிலிருந்து வெளியேறியதுடன், மாலை 5 மணிக்கு வீடு திரும்பியுள்ளனர். 

வீடு திரும்பியபோதே வீட்டின் கதவு உடைக்கப்பட்டுள்ளமை மற்றும் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளமை தொியவந்துள்ளது. 

இதனையடுத்து சம்பவம் தொடர்பாக கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு