பதுக்கல் வியாபாரிகளை தேடி யாழ்.மாவட்டத்தில் பாவனையாளர் அதிகாரசபை அதிரடி நடவடிக்கை..!

ஆசிரியர் - Editor I
பதுக்கல் வியாபாரிகளை தேடி யாழ்.மாவட்டத்தில் பாவனையாளர் அதிகாரசபை அதிரடி நடவடிக்கை..!

யாழ்.மாவட்டத்திலுள்ள அத்தியாவசிய பொருட்கள் விற்பனை நிலையங்கள் மற்றும் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் பாவனையாளர் அதிகாரசபையினர் இன்று திடீர் சோதனை நடவடிக்கை முன்னெடுத்துள்ளனர். 

அத்தியாவசிய பொருட்கள் மற்றும் எரிபொருள் பதுக்கல் இடம்பெறுவதாக மக்கள் குற்றஞ்சாட்டும் நிலையில் யாழ்.மாவட்ட செயலரின் பணிப்பின் கீழ்  மாவட்ட பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபையினரால் இன்றைய தினம் யாழ் குடாநாட்டில் சுற்றிவளைப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டது.

பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபை இணப்பாளர் விஜிதரனின் நெறிப்படுத்தலில் குடாநாட்டில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்கள் வர்த்தக நிலையங்கள் சோதனையிடப்பட்டதோடு 

 எரிபொருள் விற்பனை நிலையங்களின் எரிபொருள் கொள்கலன்களும் கண்காணிக்கப்பட்டது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு