யாழ்.மானிப்பாயில் வீடு உடைத்து கொள்ளை..! 6 லட்சத்திற்கும் அதிக பெறுமதியான பொருட்கள் மீட்பு..

ஆசிரியர் - Editor I
யாழ்.மானிப்பாயில் வீடு உடைத்து கொள்ளை..! 6 லட்சத்திற்கும் அதிக பெறுமதியான பொருட்கள் மீட்பு..

யாழ்.மானிப்பாய் - முத்துத்தம்பி வீதியில் வீடொன்றை உடைத்து உள்நுழைந்து பெறுமதியான பொருட்களை கொள்ளையடித்த ஒருவர் யாழ்.மாவட்ட பொலிஸ் புலனாய்வு பிரிவினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மானிப்பாய் பகுதியில் கடந்தவாரம் புதிதாக கட்டப்பட்ட வீடொன்றை உடைத்து உள்நுழைந்த கொள்ளை கும்பல் சலவை இயந்திரம்,  

ஏசி, சிசிரிவி கமரா உள்ளிட்ட 6 லட்சத்து 18 ஆயிரம் ரூபாய் பெறுமதியான இலத்திரனியல் உபகரணங்களை கொள்ளையடித்து சென்றிருந்தது.

குறித்த சம்பவம் தொடர்பில் மானிப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த முறைப்பாட்டின் அடிப்படையில் 

யாழ்.பிராந்திய மூத்த பொலிஸ் அத்தியட்சகரின் கீழ் இயங்கும் மாவட்ட பொலிஸ் புலனாய்வுப் பிரிவின் மானிப்பாய் பொலிஸ் நிலைய உத்தியோகத்தரினால் முன்னெடுக்கப்பட்ட விசாரணையின் அடிப்படையில் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

மானிப்பாய் ரிசி ஒழுங்கையைச் சேர்ந்த 24 வயதுடைய இளைஞர் ஒருவரே கைது செய்யப்பட்டார். சந்தேக நபரினால் வழங்கப்பட்ட தகவலின் அடிப்படை்யில் 

திருட்டுப் போயிருந்த மின் உபகரணங்களும் பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டன. சந்தேக நபர் மல்லாகம் நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தப்படவுள்ளார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு