யாழ்.மாவட்ட விவசாயிகளுக்கு இன்று தொடக்கம் மண்ணெண்ணெய் விநியோகம்..

ஆசிரியர் - Editor I
யாழ்.மாவட்ட விவசாயிகளுக்கு இன்று தொடக்கம் மண்ணெண்ணெய் விநியோகம்..

யாழ்.மாவட்ட விவசாயிகளுக்கு கமநல சேவை திணைக்களம் ஊடாக வழங்கப்பட்ட எரிபொருள் அட்டைகளின் அடிப்படையில் இன்று தொடக்கம் மண்ணெண்ணெய் வழங்கப்படவுள்ளது.

மாவட்டச் செயலர் க.மகேசனின் அறிவுறுத்தலில் கமநல சேவைகள் திணைக்களம் மற்றும் பெற்றோலியக் கூட்டுத்தாபனம் இணைந்து இந்த நவடிக்கைகளை இன்று முதல் முன்னெடுக்கவுள்ளன.

மாவட்ட விவசாயிகளுக்கு எரிபொருளை வழங்குவதற்கு அவர்களது பயிர்ச்செய்கை நிலங்களின் அடிப்படையில் முன்னர் எரிபொருள் அட்டை வழங்கப்பட்டது.

அந்த அட்டையைக் காண்பித்து யாழ்.மாவட்டத்தில் உள்ளதெரிவு செய்யப்பட்ட 14 எரிபொருள் நிரப்பு நிலையங்களிலும் இன்று முதல் மண்ணெண்ணெயைப் பெற்றுக்கொள்ள முடியும்.

முதல் கட்டமாக விவசாயிகளின் தேவை அளவின் 25 சதவீத மண்ணெண்ணெய் வழங்கப்படவுள்ளது. இதேவேளை, எரிபொருள் அட்டை இல்லாத விவசாயிகள் இன்று 

தத்தமது பிரதேச கமநல சேவைகள் நிலையத்தில் விண்ணப்பத்து பெற்றுக்கொண்டு நாளை மண்ணெண்ணெயைப் பெற்றுக்கொள்ள முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு