யாழ்.புங்குடுதீவுக்கான மின் விநியோக மார்க்கங்களின் திருத்த பணிகள் இன்று ஆரம்பம்! பொதுமக்கள் சிரமங்களை எதிர்கொள்ளே நோிடலாம் என்கிறது இ.ம.ச..

ஆசிரியர் - Editor I
யாழ்.புங்குடுதீவுக்கான மின் விநியோக மார்க்கங்களின் திருத்த பணிகள் இன்று ஆரம்பம்! பொதுமக்கள் சிரமங்களை எதிர்கொள்ளே நோிடலாம் என்கிறது இ.ம.ச..

யாழ்.வேலணை - புங்குடுதீவு பாலம் ஊடாக பங்குடுதீவுக்கு கடல்வழியாக கொண்டு செல்லப்படும் உயர் அழுத்த மின்மார்க்க வடங்கள் மற்றும் மின்கம்பங்களை பராமரிக்கும் பணிகள் இன்று தொடக்கம் ஆரம்பிக்கப்படவுள்ளது. 

கடல்நீர் வற்றுக்காலத்திலேயே இந்த பணிகளை நிறைவேற்ற முடியும் என்பதால் இன்று தொடக்கம் எதிர்வரும் ஜீலை 31ம் திகதிவரையான காலத்தில் கட்டம் கட்டமாக இந்த பணிகள் மேற்கொள்ளப்படும். 

மேலும் இந்த புனரமைப்பு மற்றும் பராமரிப்பு பணிகளால் தீவக வீதியை பயன்படுத்துவோருக்கு சிரமங்கள், சால தாமதங்கள் உருவாகலாம். என இலங்கை மின்சாரசபையின் வடமாகாண பிரதி பொது முகாமையாளர் கூறியுள்ளார். 

எனினும் நயினாதீவு திருவிழா காலத்தில் இந்த பணிகள் இடம்பெறமாட்டாது எனவும், திருவிழாவுக்கான போக்குவரத்தில் இடையூறுகள் இருக்காது எனவும் அவர்கள் மேலும் தொிவித்துள்ளார். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு