தியாகி பொன்.சிவகுமாரனின் 48வது ஆண்டு நினைவேந்தல் இன்று உரும்பிராயில்..!

ஆசிரியர் - Editor I
தியாகி பொன்.சிவகுமாரனின் 48வது ஆண்டு நினைவேந்தல் இன்று உரும்பிராயில்..!

தியாகி பொன் சிவகுமாரனின்  48வது ஆண்டு அஞ்சலி நிகழ்வுகள் உரும்பிராயில் உள்ள அவருடைய நினைவிடத்தில் இன்று காலை நடைபெற்றுள்ளது. 

தியாகி பொன் சிவகுமாரன்நண்பர்களால் உரும்பிராயில் உள்ள பொன் சிவகுமாரனின் நினைவிடத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிக்கு இடம்பெற்ற நினைவேந்தலில் 

ஈகைச்சுடரினை பொன் சிவகுமாரனின் சகோதரி ஏற்றிவைத்ததுடன் அகவணக்கம், மலரஞ்சலியும் செலுத்தப்பட்டது. இவ் அஞ்சலி நிகழ்வில் கட்சி பேதமற்று பலரும் கலந்து கொண்டனர்.

இதேபோல் தியாகி பொன் சிவகுமாரனின் கல்லறையிலும் நினைவேந்தல் இடம்பெற்றிருக்கின்றது. 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு