யாழ்.வடமராட்சி திக்கம் பகுதியில் இராணுவம் - பொலிஸார் இணைந்து சுற்றிவளைப்பு..! 3 பேர் கைது...

ஆசிரியர் - Editor I
யாழ்.வடமராட்சி திக்கம் பகுதியில் இராணுவம் - பொலிஸார் இணைந்து சுற்றிவளைப்பு..! 3 பேர் கைது...

யாழ்.பருத்தித்துறை - திக்கம் பகுதியில் சுமார் 1 கிலோ 900 கிராம் கஞ்சாவுடன் 3 பேர் நேற்று பிற்பகல் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். 

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, திக்கம் பகுதியில் கஞ்சா விற்பனை நடப்பதாக இராணுவ புலனாய்வு பிரிவிற்க்கு தகவல் கிடைத்துள்ளது. 

குறித்த தகவலின் அடிப்படையில் இராணுவ புலனாய்வு பிரிவினர் வல்வெட்டித்துறை பொலிஸாருடன் இணைந்து நடத்திய சுற்றிவளைப்பு தேடுதலின்போது குறித்த நபர்கள் கைதாகினர். 

அவர்களிடமிருந்து 1 கிலோ 900 கிராம் கஞ்சா கைப்பற்றபட்டுள்ளதுடன் திக்கம், தும்பளை, பலாலி அன்ரனிபுரம் ஆகிய பகுதிகளை சேர்ந்த மூவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். 

கைது செய்யப்பட்ட மூவரையும் பருத்தித்துறை நீதிமன்றில் முற்படுத்துவதற்க்கான நடவடிக்கைகளை பொலிஸார்  முன்னெடுத்தனர். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு