வீட்டில் கொண்டாட்டம், ஆண்கள் மது விருந்தில் கலந்துகொண்ட பின் உறக்கம், வீடு புகுந்து கைவரிசையை காட்டிய கொள்ளையன்! யாழ்.இளவாலையில் சம்பவம்..

ஆசிரியர் - Editor I
வீட்டில் கொண்டாட்டம், ஆண்கள் மது விருந்தில் கலந்துகொண்ட பின் உறக்கம், வீடு புகுந்து கைவரிசையை காட்டிய கொள்ளையன்! யாழ்.இளவாலையில் சம்பவம்..

வீட்டில் இருந்து ஆண்கள் மதுபானம் குடித்துவிட்டு உறங்கிய நிலையில் வீட்டுக்குள் நுழைந்த கொள்ளை கும்பல் வீட்டிலிருந்த 20 பவுண் நகைகளை கொள்ளையடித்துச் சென்றிருக்கின்றது. 

யாழ்.இளவாலை - சிறுவிளான் பகுதியில் நேற்றுமுன்தினம் இடம்பெற்றிருப்பதாக பொலிஸாரிடம் முறையிடப்பட்டிருக்கின்றமை குறிப்பிடத்தக்கதாகும். 

சம்பவம் தொடர்பாக மேலும் தொியவருவதாவது, வீட்டில் கொண்டாட்டம் இடம்பெற்றதாக கூறப்படும் நிலையில், அதில் கலந்துகொண்ட அதிகளவான ஆண்கள் மது விருந்தில் ஈடுபட்ட பின்னர் தூங்கிவிட்டனர்.

இதை பயன்படுத்திய வீட்டுக்குள் புகுந்த திருடன், நகைகளை திருடிச் சென்றுள்ளான். இதனையடுத்து காலை எழுந்து பார்த்தபோது வீட்டின் கதவுகள் அனைத்தும் திறந்துள்ளமை தெரியவந்துள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் இளவாலை பொலிஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. மோப்ப நாயின் உதவியுடன் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு இருந்தது.

அத்துடன் நகை திருட்டுபோன வீட்டில் இருந்து, 100 மீட்டர் தொலைவில் உள்ள வீட்டில் கைத்தொலைபேசி ஒன்றும் திருடப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது. எனினும் சம்பவம் தொடர்பில் இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை.

 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு