யாழ்.நகரில் உள்ள நகைக்கடையில் 11 பவுண் நகைகளை திருடிய 3 பெண்கள், திருடிய நகைகளுடன் மறுநாளே சிக்கினர்..!

ஆசிரியர் - Editor I
யாழ்.நகரில் உள்ள நகைக்கடையில் 11 பவுண் நகைகளை திருடிய 3 பெண்கள், திருடிய நகைகளுடன் மறுநாளே சிக்கினர்..!

யாழ்.நகரில் உள்ள நகைக்கடை ஒன்றில் 11 பவுண் நிறையுயை 7 காப்புக்களை திருடிய 3 பெண்கள் யாழ்.நகரில் உள்ள நிதி நிறுவனம் ஒன்றில் அடகு வைப்பதற்குச் சென்றிருந்த நிலையில் வசமாக சிக்கியுள்ளனர். 

கடந்த 31ம் திகதி யாழ்.நகரிலுள்ள பிரபல நகைக்கடை ஒன்றுக்கு சென்றிருந்த 3 பெண்கள் நகை வாங்குவதுபோல் பாசாங்கு செய்து சுமார் 11 பவுண் நிறையுடைய 7 காப்புகளை திருடிச் சென்றிருந்தனர். 

இந்நிலையில் நேற்றுமுன்தினம் 1ம் திகதி யாழ்.நகரில் உள்ள நிதி நிறுவனம் ஒன்றில் கொள்ளையடித்த நகைகளை அடகு வைப்பதற்கு சென்றிருக்கின்றனர். 

அந்த சமயத்தில் கொள்ளை இடம்பெற்ற கடையின் ஊழியர் ஒருவரும் அதே நிறுவனத்தில் இருந்த நிலையில் அவர் அடையாளம் கண்டு தனது கடை உரிமையாளருக்கு தகவல் வழங்கியிருக்கின்றார். 

மேலும் குறிப்பிட்ட நிதி நிறுவனத்திற்கும் இரகசியமாக தகவலை வழங்கியுள்ளார். இதனையடுத்து கொள்ளையடித்த நகைகளுடன் 3 பெண்களும் சி்கியிருக்கின்றனர். 

அவர்கள் 3 பேரும் நாவற்குழி பகுதியில் உள்ள சர்சைக்குரிய குடியேற்றத்தில் வசிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு