யாழ்.பொதுநுாலகம் எரிக்கப்பட்டதன் 41வது ஆண்டு நினைவேந்தல் இன்று அனுட்டிப்பு..!

ஆசிரியர் - Editor I
யாழ்.பொதுநுாலகம் எரிக்கப்பட்டதன் 41வது ஆண்டு நினைவேந்தல் இன்று அனுட்டிப்பு..!

யாழ்.பொதுநுாலகம் எரிப்பின் 41வது ஆண்டு நினைவேந்தல் இன்று அனுட்டிக்கப்பட்டிருக்கின்றது. 

யாழ்.மாநகரசபையின் ஒழுங்கமைப்பில் இன்று காலை 9.30 மணியளவில் யாழ்.பொது நூலகத்தில் இந்த நினைவேந்தல் இடம்பெற்றது.

நினைவேந்தலின்போது யாழ்ப்பாண பொது நூலகத்தை உருவாக்குவதற்கு காரணகர்த்தாவாக விளங்கிய செல்லப்பா அவர்களுக்கும், 

பொது நூலகம் எரியூட்டப்பட்டதை அறிந்து உயிரிழந்த தாவீது அடிகளாருக்கும் அஞ்சலி செலுத்தப்பட்டது.

இந்த நினைவேந்தலின்போது மாநகர முதல்வர் வி.மணிவண்ணன், மாநகர பிரதி முதல்வர் து.ஈசன், மாநகர ஆணையாளர் ஜெயசீலன், 

பொது நூலக பிரதம நூலகர், மாநகர சபை உறுப்பினர்கள்வாசகர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

பொது நூலகம்1981 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 1ஆம் திகதி வன்முறைக் குழுவொன்றினால் தீயூட்டப்பட்டது.

நூலகம் எரிக்கப்பட்ட காலத்தில், அங்கு சுமார் 97,000 அரிய நூல்கள் இருந்ததுடன், தென்கிழக்காசியாவிலேயே மிகப்பெரிய நூலகமாகவும் திகழ்ந்தது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு