யாழ்.நெல்லியடி நகரில் பட்டப்பகலில் வீடு உடைத்து கொள்ளை! 20 வயதான பெண் உட்பட இருவர் கைது..!

ஆசிரியர் - Editor I
யாழ்.நெல்லியடி நகரில் பட்டப்பகலில் வீடு உடைத்து கொள்ளை! 20 வயதான பெண் உட்பட இருவர் கைது..!

யாழ்.நெல்லியடி நகரில் உள்ள வீடொன்றை உடைத்து கொள்ளையடித்த குற்றச்சாட்டில் பெண் உட்பட இருவர் 2 மாதங்களின் பின்னர் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். 

நகரப் பகுதியில் உள்ள வீடொன்றை பட்டப்பகலில் உடைத்து நகைகள் மற்றும் தொலைபேசி உள்ளிட்ட பெறுமதியான பொருள்கள் கொள்ளையடித்துச் செல்லப்பட்டிருந்தது. 

குறித்த சம்பவம் தொடர்பில் நெல்லியடிப் பொலிஸ் நிலையத்தில் செய்யப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையில் காங்கேசன்துறை பிராந்தியத்துக்குப் பொறுப்பான மூத்த பொலிஸ் அத்தியட்சகரின் கீழான மாவட்டக் குற்றத்தடுப்பு பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்தனர்.

இந்த நிலையில் 28 வயதுடைய ஆண் ஒருவரும் 20 வயதுடைய பெண் ஒருவரும் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டனர்.சந்தேக நபர்களிடமிருந்து ஐ போன் ஒன்றும் ஐ பாட் ஒன்றும் 6 கிராம் எடையுடைய தோடுகளும் 

மற்றும் 35 ஆயிரம் ரூபாய் பணமும் கைப்பற்றப்பட்டன. சந்தேக நபர்கள் இருவரும் நீதிமன்ற நடவடிக்கைகளுக்காக நெல்லியடி பொலிஸ் நிலையத்தில் முற்படுத்தப்பட்டுள்ளனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு