யாழ்.தீவக மக்களுக்கு இந்தியா வழங்கிய மண்ணெண்ணெய் இன்று கையளிக்கப்பட்டது!

ஆசிரியர் - Editor I
யாழ்.தீவக மக்களுக்கு இந்தியா வழங்கிய மண்ணெண்ணெய் இன்று கையளிக்கப்பட்டது!

யாழ்.தீவக கடற்றொழிலாளர்களுக்கு இந்திய அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட மண்ணெண்ணெய் இன்றைய தினம் தீவக மக்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டிருக்கின்றது. 

இந்திய அரசினால் வழங்கப்பட்ட சுமார் 15,000 லீட்டர் மண்ணெண்ணெய் தீவகப் பகுதி கடற்தொழிலாளர்களுக்கு வழங்குவதற்காக இந்திய அரசாங்கத்தினால் வழங்கப்பட்டது.

வேலணை மற்றும் ஊர்காவற்துறை மீனவர்களுக்கு மண்ணெண்ணெய் வழங்கும் நிகழ்வு ஊர்காவற்றுறை பிரதேச செயலகத்தில் இன்று இடம்பெற்றது. தெரிவு செய்யப்பட்ட மீனவர்களுக்கு 

இந்திய அரசினால் வழங்கப்பட்ட மண்ணெண்ணெய் பகிர்ந்தளிக்கப்பட்டது. இந்நிகழ்வில் கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இந்திய துணைத்தூதர் நடராஜ், மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் 

மேலதிக அரசாங்க அதிபர் ம.பிரதீபன், ஊர்காவற்றுறை பிரதேச செயலாளர் சதீசன் மஞ்சுளாதேவி, நீரியல் வளத் திணைக்கள் அதிகாரிகள் என பலரும் கலந்து கொண்டனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு