யாழ்.அச்சுவேலி எரிபொருள் நிரப்பு நிலையத்தின் முன்மாதிரியான செயற்பாடு..!

ஆசிரியர் - Editor I
யாழ்.அச்சுவேலி எரிபொருள் நிரப்பு நிலையத்தின் முன்மாதிரியான செயற்பாடு..!

யாழ்.மாவட்டத்தில் எரிபொருள் விலையேற்றத்தின் பின்னரும் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் பொதுமக்கள் அதிகளவில் காணப்பட்டே வருகின்றனர். 

இந்நிலையில் இலகுவாக எரிபொருளை வழங்கும் நோக்குடன் நேற்றைய தினம் அச்சுவேலியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் பெண்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளது.

குறித்த எரிபொருள் நிரப்பும் நிலையத்திலேயே நீண்ட வரிசையில் ஆண்களும் பெண்களும் பெற்றோலை பெறுவதற்கு காத்திருந்த நிலையில்,  பெண்களை தனியாக வரிசைப்படுத்தி எரிபொருள் வழங்கப்பட்டது. 

இவ்வாறு பெண்களுக்கு முன்னுரிமை வழங்கப்படுவதை எவரும் தவறுதலாக பயன்படுத்தி தமது தேவைக்கு அதிகமாக எரிபொருளை சேமிக்க வேண்டாம் எனவும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இந்த முன்மாதிரியான செயற்பாட்டினால் எரிபொருளை பெற வந்த பலரும் அச்சுவேலி எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு