யாழ்.பொது நுாலகத்தை பார்வையிட்ட அமொிக்க துாதுவர்..! மின்சாரமும் இல்லை, மின் பிறப்பாக்கியாலும் பயனில்லை, பதில் முதல்வர், ஆணையாளர்?????

ஆசிரியர் - Editor I
யாழ்.பொது நுாலகத்தை பார்வையிட்ட அமொிக்க துாதுவர்..! மின்சாரமும் இல்லை, மின் பிறப்பாக்கியாலும் பயனில்லை, பதில் முதல்வர், ஆணையாளர்?????

இலங்கைக்கான அமொிக்க துாதுவர் ஜீலி சுங் யாழ்.பொது நுாலகத்தை இன்று காலை பார்வையிட்டிருக்கின்றார். 

அமொிக்க துாதுவர் யாழ்.பொது நுாலகத்தை பார்வையிட்டிருந்த சமயம் பொது நுாலகத்தில் மின்சாரம் இல்லத நிலையில், 

நுாலகத்திற்குரிய மின் பிறப்பாக்கியும் தயார்ப்படுத்தப்படாத நிலையில் மின்சாரம் இல்லாத பொது நுாலகத்தை அமொிக்க துாதுவர் பார்வையிட்டார். 

இது குறித்து மேலும் தொியவருவதாவது, காலை பதினோரு மணி அளவில் இலங்கை மின்சார சபையின் மின்சாரம் தடைப்பட்டது.

இந்நிலையில் அமெரிக்க தூதுவர் யாழ்.பொது நூலகத்திற்கு விஜயம் மேற்கொண்டிருந்தார். 

இதன்போதே மின்சாரம் இல்லை என்பது அங்கிருந்தவர்களால் ஊகிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மின்பிறப்பாக்கியும் திடீரென இயங்காத காரணத்தினால் 

தூதுவர் குழு சிறிது நேர மின்சாரம் இன்றிப் பொது நூலகத்தை பார்வையிட்ட வேண்டிய தேவை ஏற்பட்டது.

பின்னர் மின்சார சபை ஊழியர்களின் உதவியுடன் மின்பிறப்பாக்கி சரிசெய்யப்பட்டு மின்சாரம் வழங்கப்பட்டது.

குறித்த விடயம் தொடர்பில் யாழ்.மாநகரசபை ஆணையாளர் ஜெயசீலனைத் தொடர்பு கொண்டு கேட்டபோது மின்பறப்பாக்கி இயங்காது உண்மைதான் 

ஆனால் அது உடனடியாக சரி செய்யப்பட்டு மின்சாரம் வழங்கப்பட்டது என தெரிவித்தார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு