திடீரென ஏற்பட்ட மண்மேட்டுச் சரிவு: சகோதரர்கள் இருவரில் ஒருவரின் உயிர் பிரிந்த சோகம்…!

ஆசிரியர் - Admin
திடீரென ஏற்பட்ட மண்மேட்டுச் சரிவு: சகோதரர்கள் இருவரில் ஒருவரின் உயிர் பிரிந்த சோகம்…!

நாவலப்பிட்டி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கோணவலபத்தன பகுதியில் வீடு ஒன்றின் மீது மண்மேடு சரிந்து விழுந்ததில் சிக்குண்ட சகோதரர்கள் இருவரில் , அண்ணன் உயிரிழந்துள்ளதாக நாவலப்பிட்டி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த சம்பவம் நேற்று இரவு 8.30 மணியளவில் இடம்பெற்றுள்ளதாகவும்,  சகோதரர்கள் இருவர் தனது வீட்டின் விராந்தையில் தொலைக்காட்சி பார்த்துக்கொண்டிருந்த வேளையில் தீடிரென வீட்டின் அருகில் உள்ள மண்மேடு சரிந்து விழுந்துள்ளதாகவும் தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளன.

இதில்,  தம்பி மயிரிழையில் உயிருடன் மீட்கப்பட்ட நிலையில் அண்ணன் மண்ணில் சிக்குண்டு ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு