போலி ஆவணங்களை பயன்படுத்தி தமிழ் அரசியல் கைதி ஆனந்த சுதாகரனின் காணி அபகரிக்கப்பட்டதா..? யாழ்ப்பாணத்தில் உள்ள ஹோட்டல் உரிமையாளர் பின்னணியா?

ஆசிரியர் - Editor I
போலி ஆவணங்களை பயன்படுத்தி தமிழ் அரசியல் கைதி ஆனந்த சுதாகரனின் காணி அபகரிக்கப்பட்டதா..? யாழ்ப்பாணத்தில் உள்ள ஹோட்டல் உரிமையாளர் பின்னணியா?

தமிழ் அரசியல் கைதி ஆனந்த சுதாகரனின் காணி ஆவணங்கள் யாழ்ப்பாணத்தில் உள்ள ஹோட்டல் உரிமையாளரின் பெயருக்கு மோசடியான முறையில் மாற்றப்பட்டிருப்பதாக ஆனந்த சுதாகரனின் சகோதரி குற்றஞ்சாட்டியிருக்கின்றார். 

கிளிநொச்சி - பாரதிபுரம் கிராம அலுவலர் பிரிவில் இரணைமடு பகுதியில் உள்ள காணியும் யாழ்ப்பாணத்தில் உள்ள பிரபல ஹோட்டல் உரிமையாளரின் பெயருக்கு மோசடியாக மாற்றப்பட்டிருப்பதாக சகோதரி கூறியுள்ளார். 

இது குறித்து சகோதரி கூறுகையில், போலி ஆவணங்களை பயன்படுத்தி, போலி கையெழுத்துக்களுடன் காணி உரிமம் மாற்றப்பட்டுள்ளது. மேலும் இதனை தட்டிக்கேட்ட தம் மீது தாக்குதல் நடத்த முயற்சித்ததாகவும் குற்றஞ்சாட்டியுள்ளார். 

மேலும் ஆனந்த சுதாகரனை விடுதலை செய்ய முடியாதவர்கள் அவருடைய காணிகளையாவது பாதுகாத்து கொடுங்கள் என தாயாரும், சகோதரியும் கோரிக்கை விடுத்திருக்கின்றனர். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு