மூச்சு திணறல் காரணமாக யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பெண்ணுக்கு கொரோனா தொற்று உறுதி..! அன்டிஜன் பரிசோதனை முடிவு..

ஆசிரியர் - Editor I
மூச்சு திணறல் காரணமாக யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பெண்ணுக்கு கொரோனா தொற்று உறுதி..! அன்டிஜன் பரிசோதனை முடிவு..

யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த சுதுமலை பகுதியை சேர்ந்த 64 வயதான வயோதிப பெண் ஒருவருக்கு அன்டிஜன் பரிசோதனையில் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. 

நேற்றய தினம் மாலை குறித்த பெண்ணிடம் அன்டிஜன் பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட நிலையில் தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கின்றது. 

இதயைடுத்து குறித்த பெண்ணுக்கு சேவை புரிந்த தாதி ஒருவர் தனிமைப்படுத்தப்பட்டிருக்கின்றார். மேலும் தொற்றுக்குள்ளான வயோதிப பெண்ணுக்கு பீ.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்படவுள்ளது. 

அதன் முடிவுகள் வெளியானதன் பின்பே சிகிச்சை நிலையத்திற்கு அனுப்பபடவுள்ளார். இதேவேளை குறித்த பெண் ஏற்கனவே யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுள்ளதுடன், 

குணமடைந்து வீடு திரும்பிய நிலையில் திடீர் மூச்சு திணறல் ஏற்பட்டதை தொடர்ந்தே மீளவும் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார் என தொியவருகின்றது. 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு