157வது பொலிஸ் வீரர்கள் தினம் யாழ்.பொலிஸ் நிலையத்தில் இன்று நடைபெற்றது..!

ஆசிரியர் - Admin
157வது பொலிஸ் வீரர்கள் தினம் யாழ்.பொலிஸ் நிலையத்தில் இன்று நடைபெற்றது..!

157வது பொலிஸ் வீரர்கள் தினம் யாழ்.பொலிஸ் நிலையத்தில் வெகு சிறப்பாக இன்று காலை நடைபெற்றிருக்கின்றது. 

யாழ்.பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரசாத் பெர்னாண்டோ தலமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் யாழ்.பிராந்திய  சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரினால் பொலிஸ் கொடி 

அரைக்கம்பத்தில் பறக்க விடப்பட்டு கடமையின் போது உயிரிழந்த போலீசாருக்கு 2 நிமிட அகவணக்கம் இடம்பெற்று உயிரிழந்த பொலிஸ் உத்தியோகத்தர்கள் நினைவாக 

மலர் வளையங்கள் வைக்கப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டது. குறித்த நிகழ்வில் யாழ்ப்பாண பிரிவு க்குட்பட்டபொலிஸ் நிலையங்களின் பொறுப்பதிகாரிகள் 

யாழ். உதவி பொலிஸ் அத்தியட்சகர் கள். ஓய்வுபெற்ற பொலிஸ் உத்தியோகத்தர்கள் பாடசாலை மாணவர்கள் கலந்து கொண்டார்கள் இலங்கை பொலிஸ் திணைக்களத்தில் இன்று வரை 

ஆயிரத்து 311 பொலிஸ் உத்தியோகத்தர்கள் தமது சேவையின் போது உயிர்களைத் தியாகம் செய்துள்ளதோடு ஆயிரத்து 620 பேர் அங்கவீனர்களாக்கப்பட்டு ள்ளார்கள்

கடமையின்.போது குற்றவாளிகள் எதிரிகளை கைது செய்யும் நடவடிக்கையின் போது அங்கவீனமாக்கப்பட்டுள்ள களுக்குரிய அனைத்து வசதிகளும் 

பொலிஸ் திணைக்களத்தினால் மேற்கொள்ளப்பபடுகின்றமை குறிப்பிடத்தக்கது .

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு