11.6 மில்லியன் ருபாய் செலவில் வட்டுக்கோட்டை அஞ்சல் அலுவலகம்..! அமைச்சர் ஹெகலிய ரம்புக்வெல திறந்துவைத்தார்..
வட்டுக்கோட்டையில் 11.6 மில்லியன் ரூபா நிதியில் புதிதாக கட்டப்பட்ட வட்டுக்கோட்டை அஞ்சல் அலுவலகம் இன்று காலை வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டது.
அஞ்சல்துறை அபிவிருத்து ஊடகத்துறை அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல வினால் குறித்த அஞ்சலகமானது இன்றையதினம் வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டது.
வடக்கு மாகாண பிரதி அஞ்சல் மா அதிபதி மதுமதி வசந்தகுமார் தலைமையில் இடம்பெற்ற குறித்த அஞ்சல் அலுவலக திறப்பு நிகழ்வில் அஞ்சல்துறை அமைச்சர் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டு அ
ஞ்சல் அலுவலகத்தை நாடா வெட்டி திறந்து வைத்தார்குறித்த நிகழ்வில்ஊடகம்,தபால்த்துறை அமைச்சின் செயலாளர் ரஞ்சித் ஜெகவீர பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் ராமநாதன்
ஊடகத்துறை தபால்துறை அபிவிருத்திஅமைச்சர் ஹெகலிய ரம்புக்வெல மற்றும் வடக்கு மாகாண தபால் திணைக்கள உத்தியோகத்தர்கள் நிகழ்வில் கலந்து கொண்டனர்.