விடுதலைப் புலிகளின் மாலதி படையணியின் பயிற்சி முகாமில் துப்பாக்கி கண்டெடுப்பு..! இறுதியில் காத்திருந்த அதிர்ச்சி..

ஆசிரியர் - Editor I

யாழ்.மாவட்டம் தமிழீழ விடுதலை புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்தபோது மாலதி படையணியினரின் பயிற்சி முகாம் வரணி- தாவளை இயற்றாளைப் பகுதியில் இயங்கி வந்தது. 

குறித்த பெண்கள் படையணியினரின் பயிற்சிக்காக பயன்படுத்திய துப்பாக்கி குறித்த பயிற்சி முகாம் இயங்கிய பகுதியில் இன்று காணப்பட்டதை அடுத்து 

பொதுமக்களால் கொடிகாமம் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது. இதனையடுத்து சம்பவ இடத்திற்குச் சென்ற பொலிஸார் துப்பாக்கியை மீட்டனர்.

மீட்கப்பட்ட துப்பாக்கியை பரிசோதித்தபோது அது மரத்தினாலான பொம்மைத் துப்பாக்கி எனத் தெரிய வந்தது. இது போர்ப் பயிற்சி வழங்கும்போது 

மரத்தினாலான பொம்மைத் துப்பாக்கிகள் பயன்படுத்துவது வழமை எனவும் கூறப்படுகிறது. 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு