யாழ்.காரைநகர் கடற்பரப்பில் கடற்படையினர் அதிரடி..! 140 கிலோ கஞ்சாவுடன் இருவர் கைது..

ஆசிரியர் - Editor I
யாழ்.காரைநகர் கடற்பரப்பில் கடற்படையினர் அதிரடி..! 140 கிலோ கஞ்சாவுடன் இருவர் கைது..

யாழ்.காரைநகர் கடற்பரப்பில் கடற்படையினர் நடத்திய அதிரடி தேடுதல் நடவடிக்கையின்போது சுமார் 140 கிலோ கஞ்சாவுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

இன்று அதிகாலை கடற்படையினருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து சந்தேகத்திற்கிடமான படகு ஒன்றை அதிரடியாக சுற்றிவளைத்த கடற்படையினர், 

படகில் நடத்திய தேடுதலின்போது சுமார் 140 கிலோ கஞ்சா மீட்கப்பட்டிருப்பதுடன், கஞ்சாவை கடத்திவந்த இருவர் கைதுசெய்யப்பட்டிருக்கின்றனர். 

கைது செய்யப்பட்ட நபர் மற்றும் மற்றும் கைப்பற்றப்பட்ட கஞ்சா பொதிகள் ஊர்காவற்றுறை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கும் நிலையில், மேலதிக விசாரணைகளை

பொலிஸார் மேற்கொண்டிருக்கின்றனர். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு