யாழ்.மாவட்டத்தில் மீண்டும் பரவும் காய்ச்சல்..! 950 பேர் பாதிப்பு, ஒருவர் பலி..

ஆசிரியர் - Editor I

யாழ்.மாவட்டத்தில் 2020 டிசம்பர் மாதம் வரையில் டெங்கு நோயால் 950 க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று குணமடைந்து உள்ள நிலையில் ஒருவர் மட்டும் இறந்துள்ளதாக என யாழ்.போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் தங்கமுத்து சத்தியமூர்த்தி தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், இவ் ஆண்டு டெங்கு நோயின் தாக்கம் கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் குறைவடைந்து உள்ள நிலையில் இனி வரும் நாட்கள் அனைவரும் மிகவும் அவதானத்துடன் இருக்க வேண்டும்.

யாழ்.குடாநாட்டில் பெய்த அடை மழை காரணமாக நீர் நிலைகள் நிரம்பி காணப்படுகின்ற நிலையில் டெங்கு நோய் தாக்கம் மிகவும் வேகமாக பரவும் நிலை காணப்படுகிறது.

இக்காலப்பகுதியில் முடிந்தவரை கொதித்தாறிய நீரை பருகுவது ஆரோக்கியமானதக இருப்பதுடன் வயிற்றோட்டம் போன்ற பிரச்சனைகள் ஏற்படுவதை தவிர்க்க கூடியதாக இருக்கும்.

ஆகவே இனி வரப்போகும் காலப்பகுதி தொற்று நோய்கள் எளிதாக பெறக்கூடிய காலப் பகுதியாக இருப்பதால் சுகாதாரத் தரப்பினர்கள் வழங்கும் வழிகாட்டல்களை உரிய முறையில் பின்பற்றி டெங்கு நோய் பரவுவதை தடுப்பது அனைவரது பொறுப்பாகும் என அவர் மேலும் தெரிவித்தார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு