யாழ்.மாவட்டத்தில் 2400 குடும்பங்களுக்கு 10 ஆயிரம் ரூபாய் நிவாரணம்..!

ஆசிரியர் - Editor I

யாழ்.மாவட்டத்தில் கொரோனா பரவல் அபாயம் காரணமாக தனிமைப்படுத்தப்பட்டுள்ள 2400 குடும்பங்களுக்கு 10 ஆயிரம் ரூபா பெறுமதியான உலர்உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டுள்ளதாக மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன்தெரிவித்தார்.

தனிமைப்படுத்தலில் உள்ளோருக்கு அரசினால் வழங்கப்படும் இடர் கால உதவி தொடர்பில் கருத்துரைக்கும் போது யாழ்.மாவட்ட அரச அதிபர்மேற்கண்டவாறு தெரிவித்தார்

யாழ்.மாவட்டத்தில் தனிமைப்படுத்தலில் உள்ளோருக்கு அரசினால் வழங்கப்படும் கோரோனா இடர்  நிவாரண உதவியின் கீழ்  26 மில்லியன் ரூபா பெறுமதியான உலர் உணவு பொருட்கள் 2400 குடும்பங்களுக்கு இன்று வரை வழங்கி வைக்கப்பட்டுள்ளதாகவும்

குறித்த நிவாரண பணிகள் இரண்டு கட்டங்களாக  ஒரு குடும்பத்திற்கு பத்தாயிரம் ரூபா உணவு பொருட்கள் வழங்கி வைக்கப்படுகின்றது. ஒவ்வொரு பிரதேச செயலர் பிரிவில் தனிமைப்படுத்தப்பட்ட குடும்பங்களின் விவரங்கள் பிரதேச செயலாளரூடாக சேகரிக்கப்பட்டு

மாவட்ட செயலகத்துக்கு அனுப்பப்பட்டு மாவட்ட செயலகத்தின் ஊடாக  சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு அனுமதிக்காக அனுப்பி வைக்கப்பட்ட பின்னர் 

நிதி மூலம் பெறப்பட்டு மாவட்டத்தில் தனிமைப்படுத்தலில் உள்ளோருக்கு குறித்த நிவாரண உதவிகள் கட்டங்கட்டமாக வழங்கி வைக்கப்பட்டுள்ளதாகவும்

மேலும் தற்போதைய நிலையில்1670 குடும்பங்கள் யாழ்.மாவட்டத்தில் தனிமைப்படுத்தப்படுத்தலில் இருப்பதாகவும் தெரிவித்தார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு