யாழ்ப்பாணம் நோக்கிவந்த இ.போ.ச பேருந்து மோதியதில் முதியவர் பலி..! பளை இயக்கச்சியில் சம்பவம், பளை வைத்தியசாலையில் குழப்பம்..

ஆசிரியர் - Editor I

கிளிநொச்சி - பச்சிலைப்பள்ளி இத்தாவில் பகுதியில் பாதசாரி கடவை ஊடாக வீதியை கடக்க முயற்சித்த முதியவர் மீது இ.போ.ச பேருந்து மோதியதில் முதியவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். 

இதனை தொடர்ந்து பளை வைத்தியசாலையில் குழப்ப நிலை ஏற்பட்டிருக்கின்றது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, இத்தாவில் பகுதியைச் சேர்ந்த பொன்னையா சிவராசா (வயது 68) என்பவர் 

7.30 மணியளவில் இத்தாவில் பகுதியில் வீதியில் மஞ்சள் கடவை ஊடாக மிதிவண்டியில் வீதியைக் கடந்துள்ளார். அவ்வேளை திருகோணமலையில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி வந்துகொண்டிருந்த அரச பேருந்து 

அவரை மோதியுள்ளது.சம்பவத்தை அடுத்து அவரை மக்கள் உடனடியாக வாகனம் ஒன்றில் பளை ஆதார வைத்தியசாலைக்கு ஏற்றிச் சென்றுள்ளனர்.

அவரைப் பரிசோதித்த வைத்தியர் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்துள்ளார். இருந்தபோதிலும் அங்கு கூடியவர்கள் சிலர் மருத்துவர்கள் மருத்துவம் பார்க்காமையாலேயே அவர் உயிரிழந்ததாக 

எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். இதனால் அங்கு குழப்ப நிலை நிலவியுள்ளது. உயிரிழந்தவரின் சடலம் பளை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. 

மேலதிக விசாரணைகளை பளை பொலிசார் முன்னெடுத்து வருகின்றனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு