கொரோனாவால் அலரும் இந்தியா!! -91 இலட்சம் பேருக்கு தொற்று-

ஆசிரியர் - Editor II
கொரோனாவால் அலரும் இந்தியா!! -91 இலட்சம் பேருக்கு தொற்று-

இந்தியாவில் இன்று திங்கட்கிழமை மேலும் 44,059 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கையும், பலி எண்ணிக்கையும் தொடர்ந்து சரிந்து வந்தநிலையில், தற்போது கடந்த சில தினங்களாக தினசரி பாதிப்பு 40 ஆயிரத்தை தாண்டியே பதிவாகி வருகிறது.

இந்த நிலையில், இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் புதிதாக 44,059 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 91,39,866 ஆக அதிகரித்துள்ளது. அதேபோல், தொற்று பாதிப்பால் இன்று திங்கட்கிழமை ஒரே நாளில் மட்டும் 511 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 1,33,738 ஆக உயர்ந்துள்ளது. 


காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு