வன்முறைகளைத் தூண்டி விட்ட பிரதான சந்தேக நபர் உள்ளிட்ட 81 பேர் கைது!

ஆசிரியர் - Admin
வன்முறைகளைத் தூண்டி விட்ட பிரதான சந்தேக நபர் உள்ளிட்ட 81 பேர் கைது!

கண்டி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் இடம்பெற்ற வன்முறைகளுக்கு காரணமாக இருந்த பிரதான சந்தேக நபரை பொலிஸார் இன்று கைது செய்துள்ளனர். அவர் உட்பட 10 பேர் இவ்வாறு கைது செய்யப்பட்டிருப்பதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. 

இதேவேளை கடந்த 4ஆம் திகதி முதல் இன்று காலை 6 மணிவரையான தினங்களிலும், ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டிருந்த காலப்பகுதிகளிலும் 71 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கொழும்பில் இன்று பகல் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டிருந்த பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர இதனைத் தெரிவித்தார். திகன மற்றும் பூஜாப்பிட்டிய ஆகிய பிரதேசங்களில் விசேட அதிரடிப் படையினரால் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என்றும் தெரிவித்தார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு