மாளிகாவத்தை அப்பிள்தோட்டத்தில் நடந்தது என்ன? மாகந்துரே மதுாஸ் சுட்டுக் கொல்லப்பட்டது எவ்வாறு? துப்பாக்கி சூடு நடத்தி தப்பி ஓடிய மோட்டார் சைக்கிள் யாருடையது..?

ஆசிரியர் - Editor I

மாகந்துரே மதுாஸ் என்ற பாதாள உலக கோஷ்டி தலைவன் சுட்டுக் கொல்லப்பட்ட நிலையில், துப்பாக்கி சூடு நடத்திய சந்தேகநபர்கள் தப்பி ஓடுவதற்கு பயன்படுத்திய மோட்டார் சைக்கிள் திருடப்பட்ட மோட்டார் சைக்கிள் என்பது தொியவந்திருக்கின்றது. 

தப்பி செல்லும்போது பொலிஸார் நடத்திய துப்பாக்கி சூட்டில் நிலைதடுமாறு கீழே விழுந்துள்ளதுடன், பொலிஸார் மீது கை குண்டு தாக்குதல் நடத்திவிட்டு அவர்கள் தப்பி சென்றதாக கூறப்படுகின்றது. எவ்வாறாயினும், குறித்த மோட்டார் சைக்கிள் 

தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் குறித்த மோட்டார் சைக்கிள் கடந்த மூன்று தினங்களுக்கு முன்னர் வௌர்ளவத்தை பிரதேசத்தில் வைத்து திருடப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது. குறித்த மோட்டார் சைக்கிள் திருடப்படும் காட்சி அருகில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கெமராவில் பதிவாகியிருந்தது.

இதேவேளை போதைப்பொருள் மறைத்துவைக்கப்பட்டிருந்த இடம் ஒன்றை காண்பிப்பதற்காக குற்றத்தடுப்பு பொலிஸ் பிரிவின் 16 பொலிஸாருடன் சென்றிருந்ததுடன், மதுாஸ் வழங்கிய தகவலடிப்படையில் நபர் ஒருவரை சூட்சுமமானமுறையில் சம்பவ இடத்திற்கு அழைத்து, 

போதைப் பொருளை மீட்கும் நோக்கில் கொழும்பு மாளிகாவத்தை - அப்பிள் தோட்டத்தில் உள்ள லக்சே என்ற அடுக்குமாடி குடியிருப்பில் நுழைந்தபோது படிக்குள் பதுங்கியிருந்தவர் துப்பாக்கி சூடு நடத்தியதுடன் பொலிஸார் மீதும் துப்பாக்கி சூடு நடத்திவிட்டு மோட்டார் சைக்கிளில் 

தப்பி ஓடியபோது பொலிஸார் துப்பாக்கி சூடு நடத்தியதில் நிலையிழந்து கீழே விழுந்ததுடன் கை குண்டை வீசிவிட்டு தப்பி ஓடியுள்ளனர்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு