நாட்டில் மேலும் 3 கிராமங்களுக்கு தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம்..! உடனடியாக அமுலுக்கு வரும் வகையில்..

ஆசிரியர் - Editor I

கொழும்பு - மத்துகம பகுதியில் உள்ள 3 கிராமங்களுக்கு கொரோனா பரவல் அச்சுறுத்தல் காரணமாக உடனடியாக அமுலுக்குவரும் வகையில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுல்படித்தப்பட்டுள்ளது.

களுத்துறை மாவட்டத்தில் அமைந்துள்ள ஓவிடிகல கிரமசேவகர் பிரிவு, பதுகம கிரமசேவகர் பிரிவு, பதுகம புதிய கொலணி கிரமசேவகர் பிரிவு ஆகிய மூன்று பிரிவுகளுக்கே உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவு பிரப்பிக்கப்பட்டுள்ளது.

குறித்த பிரதேசங்களுக்க வெளிநபர்கள் செல்லுதலும் வெளியிலிருந்து குறித்த பிரதெசங்களுக்கு செல்லவும் முற்றாக தடைவித்திக்கப்பட்டுள்ளது.

எனினும் உயர்தர பரீட்சைக்கு தோற்றும் மாணவர்கள் தமது பரீட்சை நிலையங்களுக்கு செல்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தலமையகம் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு