மேலும் 145 பேருக்கு கொரோனா தொற்று உறுதி..! கொத்தணியில் 1591 நோயாளர்கள், நாட்டில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 5 ஆயிரத்தை கடந்தது..

ஆசிரியர் - Editor I
மேலும் 145 பேருக்கு கொரோனா தொற்று உறுதி..! கொத்தணியில் 1591 நோயாளர்கள், நாட்டில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 5 ஆயிரத்தை கடந்தது..

ஹம்பகா - மினுவாங்கொட கொத்தணியில் மேலும் 145 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி சவேந்திர சில்வா கூறியுள்ளார். 

இதன்படி தொற்றுக்குள்ளானவர்களில் 48 பேர் தனிமைப்படுத்தலில் இருந்தவர்கள் எனவும், 97 பேர் ஆடை தொழிற்சாலை ஊழியர்களுடன் நெருங்கி பழகியவர்கள் எனவும் கூறப்பட்டுள்ளது. 

இதேவேளை மினுவாங்கொட கொத்தணியில் 1591 பேர் தொற்றுக்குள்ளாகியுள்ளதாக இராணுவ தளபதி மேலும் கூறியிருக்கின்றார். 

இதேவேளை இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானோர் எண்ணிக்கை 5 ஆயிரத்தை கடந்துள்ளது. 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு