கண்டியில் ஊரடங்கு நீக்கம் - பதற்றம் தொடர்கிறது!

ஆசிரியர் - Admin
கண்டியில் ஊரடங்கு நீக்கம் - பதற்றம் தொடர்கிறது!

உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் கண்டி மாவட்டத்திற்கு நேற்று அமுல்படுத்தப்பட்டிருந்த ஊரடங்கு சட்டம் நீக்கப்பட்டுள்ளது. இன்று காலை 6 மணி வரை நடைமுறையில் இருந்த ஊரடங்குச் சட்டம் தற்போது நீக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார்.

கண்டி - தெல்தெனிய மற்றும் திகன பிரதேசத்தில் ஏற்பட்ட மோதல் நிலை காரணமாக அமைதியை ஏற்படுத்தும் வகையில் இந்த சட்டம் அமுல்படுத்தப்பட்டிருந்தது. தற்போது கண்டியில் அமைதியான சூழ்நிலை காணப்படுவதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

கண்டி மாவட்டத்தின் அனைத்து பாடசாலைகளுக்கும் இன்றைய தினம் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.எனினும் விசேட அதிரடிபடையினரின் தீவிர பாதுகாப்பின் கீழ் இன்னமும் கண்டி நகரம் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு