ஹம்பகா ஆடை தொழிற்சாலையிலிருந்து யாழ்.புங்குடுதீவுக்குவந்த இரு பெண்கள் அடையாளம் காணப்பட்டனர்..! படையினர், பொலிஸார், சுகாதார பிரிவு தீவிர விசாரணை..

ஆசிரியர் - Editor I

ஹம்பகாவில் ஆடை தொழிற்சாலை ஒன்றில் பணியாற்றிய பெண் ஒருவர் கொரோனா தொற்றுக்குள்ளான நிலையில் குறித்த ஆடை தொழிற்சாலையில் பணியாற்றிய இரு பெண்களில் ஒருவர் இன்றைய தினமும், மற்றொருவர் கடந்த 30ம் திகதியும் யாழ்.புங்குடுதீவு 12ம் வட்டாரத்திற்கு வந்துள்ளனர். 

குறித்த விடயம் விசாரணைகள் ஊடாக அறியப்பட்டதை தொடர்ந்து யாழ்.புங்குடுதீவில் உள்ள குறித்த பெண்கள் இருவரும் அடையாளம் காணப்பட்டு படையினர், பொலிஸார் மற்றும் சுகாதார பிரிவின் முற்றுகைக்கு கீழ் அவர்கள் யாழ்ப்பாணம் வந்த விதம் மற்றும் யாழ்ப்பாணத்தில் சென்ற இடங்கள்

குறித்த விசாரணைகள் இடம்பெற்றுவருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்நிலையில் குறித்த பெண்கள் இருவரும் சமூக மட்டத்தில் பரவலாக நடமாடியிருப்பின் மேல் நடவடிக்கை எடுக்கப்படலாமெனவும், அவர்கள் தனிமைப்படுத்தப்படவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு