தேசிய வீடமைப்பு அதிகாரசபை அலுவலகத்திற்குள் சடுதியாக நுழைந்த ஜனாதிபதி..! மலைத்துப்போய் நின்ற அதிகாரிகள்..

ஆசிரியர் - Editor I
தேசிய வீடமைப்பு அதிகாரசபை அலுவலகத்திற்குள் சடுதியாக நுழைந்த ஜனாதிபதி..! மலைத்துப்போய் நின்ற அதிகாரிகள்..

தேசிய வீடமைப்பு அதிகாரசபையின் நாரஹேன்பிட்டிய அலுவலகத்திற்குள் சடுதியாக ஜனாதிபதி நுழைந்த நிலையில் அதிகாரிகள் செய்வதறியாமல் மலைத்துப்போய் நின்ற வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளது. 

பொதுமகன் ஒருவரின் முறைப்பாட்டை தொடர்ந்து இன்று பிற்பகல் ஜனாதிபதி சடுதியாக அலுவலகத்திற்குள் நுழைந்துள்ளார். அங்கு பணியாட்கள் உரியமுறையில் உள்ளனரா என ஆராய்ந்ததுடன், 

பல தடவை சேவை பெறுவதற்கு சென்றபோதும் தமக்கு சேவை கிடைக்கவில்லை. என பொதுமகன் ஒருவர் வழங்கிய முறைப்பாடு தொடர்பிலும் கேட்டறிந்தார். 

தொடர்ந்து மக்களுடைய தேவைகளை வினைத்திறனாக செய்து கொடுப்பது அரச ஊழியர்கள் சகலருக்கும் உள்ள கடமை என ஜனாதிபதி அறிவுறுத்திவிட்டு 

அங்கிருந்த பொதுமகன் ஒருவரை சந்தித்து அவருடைய தேவையை நிறைவேற்றிக் கொடுக்குமாறு பணித்து சென்றிருக்கின்றார்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு