இலங்கை பொலிஸ் வரலாற்றில் முதல் தடவையாக பிரதி பொலிஸ்மா அதிபராக பெண்..!

ஆசிரியர் - Editor I

இலங்கையில் முதல் தடவையாக பெண் பொலிஸ் அதிகாரி ஒருவர் பிரதி பொலிஸ்மா அதிபராக நியமிக்கப்படவுள்ளார். இதற்கான ஒப்புதலை இலங்கை பொலிஸ் ஆணைக்குழு வழங்கியுள்ளது. 

பொலிஸ் திணைக்களத்தின் சிறுவர் மற்றும் மகளிர் பிரிவைச் சேர்ந்த மூத்த பொலிஸ் அத்தியட்சகர் பிமினி ஜசினராச்சியே மூத்த பிரதிப் பொலிஸ் மா அதிபராக தேர்வு செய்யப்பட்டார்.

அவர் 1997 இல் பொலிஸ் பரிசோதகராக பொலிஸ் சேவையில் இணைந்தார். பின்னர் 2017 இல் மூத்த பொலிஸ் அத்தியட்சகராகப் பதவியுயர்வு பெற்றார்.

இலங்கை பொலிஸ் துறையில் உயர் பதவி வகித்த முதல் பெண் அதிகாரி மூத்த பொலிஸ் அத்தியட்சகர் பிரமிலா திவாகர ஆவார். பொலிஸ் சேவையில் சேர்ந்த முதல் பெண் அதிகாரியான அவர், 

மூத்த பொலிஸ் அத்தியட்சகர் பதவியில் இருந்து ஓய்வு பெற்றார்.ஒரு பெண் பொலிஸ் அதிகாரியை பிரதிப் பொலிஸ் மா அதிபராக நியமிப்பது பொலிஸ் திணைக்களத்தால் இதுவே முதன்முறை என கூறப்படுகிறது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு