கடந்த 4 மாதங்களில் 28 பேர் பலி..! பணிப் பெண்களும் அடங்குவதாக இலங்கை துாதரக வட்டாரங்கள் தகவல்..

ஆசிரியர் - Editor I
கடந்த 4 மாதங்களில் 28 பேர் பலி..! பணிப் பெண்களும் அடங்குவதாக இலங்கை துாதரக வட்டாரங்கள் தகவல்..

சவுதிக்கு தொழில் புரிந்த 28 இலங்கையர்கள் கடந்த 4 மாதங்களில் கொரோனா தொற்றுக்குள்ளாகி உயிரிழந்துள்ளதாக சவுதியில் உள்ள இலங்கை துாதரக வட்டாரங்கள் கூறுகின்றன. 

இந்த 28 பேரில் இரண்டு வீட்டுப் பணிப்பெண்களும் அடங்குகின்றனர். அதேநேரம், உயிரிழந்தவர்களின் சடலங்கள் அந்நாட்டினதும் சர்வதேச சட்டத்தின்படியும் அடக்கம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

இதேவேளை, நாட்டில் நேற்றைய தினம் 4 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது. இறுதியாக தொற்று உறுதியான மூவரும் 

சவுதி அரேபியாவில் இருந்து நாடு திரும்பியவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் இத்தாலியில் இருந்து நாடு திரும்பிய நிலையில் 

தனிமைப்படுத்தப்பட்டிருந்த ஒருவருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. 

இதற்கமைய நாட்டில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3 ஆயிரத்து 287 ஆக அதிகரித்துள்ளது. இதேநேரம், நாட்டில் இதுவரை கொரோனா தொற்றில் இருந்து 

குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 3 ஆயிரத்து 88 ஆக பதிவாகியுள்ளது.அதேவேளை, இந்த கொடிய தொற்று காரணமாக இலங்கையில் இதுவரையில் 13 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு