கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் கோர விபத்து..! 3 வயது சிறுமி பலி, தாய், தந்தை ஆபத்தான நிலையில்..

ஆசிரியர் - Editor I

கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் வீதி ஓரத்தில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள் மீது மோதி விபத்துக்குள்ளானதில் 3 வயது சிறுமி உயிரிழந்துள்ளதுடன், சிறுமியின் தந்தை மற்றும் தாய் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

குறித்த விபத்து ஆனமடுவ - மஹஉஸ்வெல பகுதியில் நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்றிருக்கின்றது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, நவகத்தேகம பிரதேசத்திலிருந்து ஆனமடுவ பகுதியை நோக்கி கணவனும், மனைவியும் தமது 3 வயது பெண் பிள்ளையுடன் 

மோட்டார் சைக்கிளில் பயணித்துள்ளனர். இதன்போது, கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் வீதியை விட்டுவிலகி வீதியோரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மற்றுமொரு மோட்டார் சைக்கிலுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.இவ்விபத்தில் படுகாயமடைந்த 3 வயது சிறுமி உட்பட 

அச்சிறுமியின் தாயும், தந்தையும் அங்கிருந்தவர்களால் ஆனமடுவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிறுமி மேலதிக சிகிச்சைக்காக குருநாகல் வைத்தியசாலைக்கும், அச்சிறுமியின் பெற்றோர்கள் புத்தளம் தள வைத்தியசாலைக்கும் மாற்றப்பட்டனர்.

இதனையடுத்து குருநாகல் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட குறித்த சிறுமி அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். உயிரிழந்த சிறுமியின் சடலம் குருநாகல் வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.இவ்விபத்தில் படுகாயமடைந்த தாயும், தந்தையும் 

புத்தளம் தள வைத்தியசாலையில் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.விபத்து தொடர்பில் ஆனமடுவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு