வெளிநாட்டவர்களால் இலங்கையில் தொடரும் கொரோனா நெருக்கடி..! தொற்றுக்குள்ளானோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிப்பு..

ஆசிரியர் - Editor I

இலங்கையில் நேற்றய தினம் மட்டும் சுமார் 39 கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டிருக்கும் நிலையில் மொத்த நோயாளர்கள் எண்ணிக்க 3234 ஆக அதிகரித்திருக்கின்றது. 

கட்டாரில் இருந்து வருகை தந்த 16 பேர், ஐக்கிய அரபு இராச்சியத்தில் இருந்து வருகை தந்த 12 பேர் குவைட்டில் இருந்து வருகை தந்த 6 பேர் மற்றும் மாலைத்தீவில் இருந்து வருகை தந்த 2 பேரே இவ்வாறு கொரோனா தொற்றுக்கு உள்ளாகி இருந்தனர். 

அத்துடன் இத்தியோப்பியாவில் இருந்து வருகை தந்த ஒருவர், தாய்லாந்தில் இருந்து வருகை தந்த யுக்ரைன் நாட்டவர் ஒருவர் மற்றும் சிவப்பு கடற்கரை பகுதியில் இருந்து வருகை தந்த கடற் பாதுகாப்பு உத்தியேலாகத்தர் ஒருவரும் 

இவ்வாறு கொரோனா தொற்றுக்கு உள்ளாகி இருந்தனர்.இதேவேளை கொரோனா தொற்றுக்கு உள்ளாகி இதுவரையில் 226 பேர் வைத்தியசாலையகளில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு