பிரிட்டனில் இருந்து நாடு திரும்பிய தேர்தல் ஆணைக்குழு உறுப்பினரின் மகள் தனிமைப்படுத்தலுக்கு உட்படாமல் யாழ் வந்தாரா? 100 நாட்களின் பின் குத்தி முறியும் பொலிஸார்.

ஆசிரியர் - Editor I
பிரிட்டனில் இருந்து நாடு திரும்பிய தேர்தல் ஆணைக்குழு உறுப்பினரின் மகள் தனிமைப்படுத்தலுக்கு உட்படாமல் யாழ் வந்தாரா? 100 நாட்களின் பின் குத்தி முறியும் பொலிஸார்.

கொரோனா தொற்று அபாயம் இல்லை என சுகாதார அமைச்சின் பணிப்பாளர் ஒப்பமிட்டு சான்றிதழ் வழங்கிய பின்பு  தனது மகளை அழைத்து வந்த  தேர்தல் ஆணைக்குழுவின் உறுப்பினர் இரட்ணஜீவன் எச் ஹூல் தொடர்புல் யாழ்ப்பாணம் பொலிசார் நேற்றைய தினம் இரண்டு மணிநேரம் வாக்கு மூலம் பெற்றதோடு இன்றும் தொடரவுள்ளது.

தேர்தல் ஆணைக் குழு உறுப்பினர் இரட்ணஜீவன். எச் ஹூலின் மகள் லண்டனில் இருந்து மே மாதம்  வந்திருந்தார். அவரை இரட்ணஜீவன் ஹீல் அழைத்து வந்தமையினால் அவரை 14 நாட்கள் கோவிட் முகாமிற்கு அனுப்ப வேண்டும் என ஆணைக்குழு அலுவலகத்தில் பதற்றம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.  

தேர்தல் ஆணைக் குழுவின் உறுப்பினர்கள் மூவரில் ஒருவரான  இரட்ணஜீவன். எச் ஹூலின் மகள் லண்டனில் கல்வி கற்று வந்தார்.  இவ்வாறு கல்வி கற்பவர் நாடு திழும்பிய மாணவர்களுடன் கடந்ந மே மாதம்  03ம் திகதி விமானம் மூலம் நாடு திரும்பியுள்ளார்.  நாடு திரும்புவதற்கு ஒரு வழிக் கட்டணமாக 2 லட்சத்து 25 ஆயிரம் ரூபா செலுத்தியே விமானச் சிட்டை பெறப்பட்டது. 

நாடு திரும்பிய இரட்ணஜீவன் எச் ஹூலின் மகள்  கொரோனா அச்சம் காரணமாக  நீர்கொழும்பில் உள்ள ஜெட்வின்புளு நட்சத்திர விடுதியில் 14 நாட்கள்  தனிமைப்படுத்தலிற்கு உட்படுத்தப்பட்டார். அவ்வாறு தனிமைப்படுத்தலிற்காக தங்கியிருந்த 14 நாட்களிற்காகவும் விடுதிச் செலவாக ஒரு லட்சத்து 75 ஆயிரம் ரூபா பணம் செலுத்தப்பட்டது.

இதன் பின்பு பீ.சி.ஆர் பரிசோதனையில் கோவிட் தொற்று இல்லை என உறுதி செய்யப்பட்டு சுகாதாரப் பணிப்பாளர் அணில் ஜெயசிங்கா மற்றும்  சவேந்திர சில்வா  ஆகியோர் ஒப்பமிடப்பட்ட சான்றிதழ் வழங்கப்பட்டது. குறித்த சான்றிதழை பெற்றவரை தந்தையார் என்ற முறையில் ஹீல் சென்று அழைத்துச் சென்றுள்ளார். 

இதனால் ஆணைக்குழு அலுவலகத்திற்கு அழைத்து சென்ற சாரதி , தேநீர் வழங்கிய அலுவலக உதவியாளர் மற்றும் உறுப்பினரை 14 நாட்கள் கோவிட் நிலையத்திற்கு அனுப்ப வேண்டும் என உத்தியோகத்தர்கள் பலரும் தெரிவித்த நிலையில் உறுப்பினர் அலுவலகத்தில் இருந்து வெளியேறி வீடு சென்றுள்ளார். இவ்வாறு வெளியேறும் சமயம் கொரோனா தொற்று இல்லை என சுகாதார அமைச்சினால. வழங்கிய சான்றிதழின் பிரதி ஒன்றினை ஆணைக்குழுவின் தவிசாளர் மகிந்த தேசப்பிரியாவிடம்  கையளிக்கப்பட்டது 

இவை அனைத்தும் நடந்து 100 நாட்கள் கடந்துவிட்ட பின்பு நேற்றைய தினம் யாழ்ப்பாணம் பொலிசார் இவை தொடர்பில் வாக்கு மூலத்தை பெற்றதோடு நாளையும் பெறவுள்ளதாக தெரிவித்துள்ளனர். 100 நாட்கள் கடந்து விட்ட பின்பு இந்த விடயத்தை பொலிசார் தூசு தட்டுவது தொடர்பில் சந்தேகம் எழுப்பப்படுகின்றது. 

ஆணைக்குழு உறுப்பினர் மற்றும் அவரது மகள் ஆகியோர் அமெரிக்க குடி உரிமை கொண்டவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு