மின் விநியோகம் வழமைக்கு திரும்ப மேலும் தாமதமாகும்..! நீர் விநியோகம், போக்குவரத்து நெருக்கடி, விசாரணை குழு அமைக்கிறது மின் சக்தி அமைச்சு...

ஆசிரியர் - Editor I
மின் விநியோகம் வழமைக்கு திரும்ப மேலும் தாமதமாகும்..! நீர் விநியோகம், போக்குவரத்து நெருக்கடி, விசாரணை குழு அமைக்கிறது மின் சக்தி அமைச்சு...

இலங்கை முழுவதும் மின் தடைப்பட்டமைக்கான காரணம் குறித்து ஆராய்வதற்காக குழு ஒன்றை நியமிக்க மின் சக்தி அமைச்சர் டளஸ் அழகப்பெரும கூறியுள்ளார்.

மின் சக்தி அமைச்சின் செயலாளருக்கு இதுதொடர்பாக ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. இந்த குழு நாளை காலை கூடவுள்ளது.

ஒரு வாரத்தில் இந்த மின் தடை ஏற்பட்டதற்கான பின்னணி குறித்து ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு மின் சக்தி அமைச்சர் கோரியுள்ளார்.

மின்சாரத்தை வழமைக்கு கொண்டு வருவதற்கான வேலைகள் இடம்பெறுவதாகவும் அவர் தெரிவித்தார்.

இதேவேளை இலங்கையின் பல பகுதிகளில் நீர் விநியோகம் தடைப்பட்டுள்ளதுடன், வீதி சமிக்ஞைகள் செயலிழந்துள்ள நிலையில் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டிருக்கின்றது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு