தமிழ்தேசிய கூட்டமைப்பின் வேட்பாளர்கள் சர்வமத தலைவர்களுடன் சந்திப்பு..

ஆசிரியர் - Editor I
தமிழ்தேசிய கூட்டமைப்பின் வேட்பாளர்கள் சர்வமத தலைவர்களுடன் சந்திப்பு..

தமிழ்தேசிய கூட்டமைப்பின் யாழ்.தேர்தல்மாவட்ட வேட்பாளர்கள் நல்லை ஆதீன குரு முதல்வர் ஞானதேசிய சோமசுந்தர பரமச்சாரிய சுவாமிகள் மற்றும் யாழ்.மறைமாவட்ட ஆயர் வணக்கத்திற்குரிய ஜஸ்டின் ஞானப்பிரகாசம் ஆகியோரை இன்று வியாழக்கிழமை சந்தித்து கலந்துரையாடினர்.

கூட்டமைப்பின் வேட்பாளரான தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா தலைமையிலான வேட்பாளர்கள் யாழ் நல்லூரில் அமைந்துள் நல்லை ஆதீனத்தில் சந்தித்தனர். இச் சந்திப்பில் வேட்பாளர்களான எம்.ஏ.சுமந்திரன், சிவஞானம் சிறிதரன்,ஈ.சரவணபவன், திருமதி சசிகலா ரவிராஜ், இமானுவேல் ஆர்னோல்ட், தபேந்திரன் 

ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.இதன் போது சமகால அரசியல் நிலைமைகள் தொடர்பிலும் தேர்கள் கள நிலைமைகள் குறித்தும் கலந்துரையாடியதுடன் தேர்தல் விஞ்ஞாபன பிரதி ஒன்றினையும் வழங்கி வைத்தனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு