மாலை 3.30 மணிவரை பாடசாலை..! கல்வியமைச்சு இறுக்கமான உத்தரவு, இன்று அல்லது நாளை சுற்றறிக்கை..

ஆசிரியர் - Editor I
மாலை 3.30 மணிவரை பாடசாலை..! கல்வியமைச்சு இறுக்கமான உத்தரவு, இன்று அல்லது நாளை சுற்றறிக்கை..

27ம் திகதி திங்கள் கிழமை தொடக்கம் தரம் 11, 12, 13 மாணவர்களுக்கான பாடசாலைகள் ஆரம்பிக்கப்படவுள்ள நிலையில் மாலை 3.30 மணிவரை கற்பித்தல் நடவடிக்கைகள் நடக்கவேண்டும். என கல்வியமைச்சு அறிவித்துள்ளது. 

குறித்த வகுப்புகளுடன் தொடர்புடைய ஆசிரியர்களைத் தவிர, ஏனைய ஆசிரியர்கள் பாடசாலைகளுக்கு சமூகமளிக்கத் தேவையில்லை என, கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.இது தொடர்பான சுற்றறிக்கை இன்று (23) அல்லது, நாளை (24) வெளியிடப்படும் 

என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஏனைய தர மாணவர்களின் கல்வி நடவடிக்கைகள், எதிர்வரும் ஓகஸ்ட் 10ஆம் திகதி முதல் முன்னெடுக்க, கல்வி அமைச்சு ஏற்கனவே தீர்மானித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு