பிரபாகரன் ஆயுதத்தால் கேட்டதை பேனாவால் எழுதிக் கொடுக்க நான் தயாரில்லை..! மஹிந்த சீறுகிறார்..

ஆசிரியர் - Editor I
பிரபாகரன் ஆயுதத்தால் கேட்டதை பேனாவால் எழுதிக் கொடுக்க நான் தயாரில்லை..! மஹிந்த சீறுகிறார்..

பிரபாகரன் ஆயுதத்தால் கேட்டதை பேனாவால் எழுதிக் கொடுக்க நாங்கள் தயாராக இல்லை. என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவர், கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இன்று வெல்லவாய, செவனகல, தன்தும சந்தியில் 

இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்து வெளியிடும் போதே பிரதமர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அரசியலமைப்பை மாற்ற, நாட்டிற்கு பொருத்தமான, ஒற்றுமையை பாதுகாப்பதற்காக புதிய அரசியலமைப்பை கொண்டு வருவதற்கு 

நாங்கள் ஆயத்தம்.பிரபாகரன் துப்பாக்கியில் பெற முயற்சித்த நாட்டை பேனையில் வழங்க நாங்கள் தயாரில்லை. உங்கள் அனைவருக்கும் நல்ல எதிர்காலம் கிட்டட்டும் என்றார். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு