பொலிஸ் சோதனை சாவடியை மோதி தள்ளிவிட்டு தப்பி சென்ற டிப்பர்..! பொலிஸ் உத்தியோகஸ்த்தர் ஒருவர் பலி, மேலும் இருவர் காயம்..

ஆசிரியர் - Editor I
பொலிஸ் சோதனை சாவடியை மோதி தள்ளிவிட்டு தப்பி சென்ற டிப்பர்..! பொலிஸ் உத்தியோகஸ்த்தர் ஒருவர் பலி, மேலும் இருவர் காயம்..

பொலிஸ் சோதனை சாவடி மீது மிகைவேகமாகவந்த டிப்பர் வாகனம் மோதியதில் பொலிஸ் உத்தியோகஸ்த்தர் ஒருவர் சம்பவ இடத்திலேயே பலியானதுடன், மேலும் இரு பொலிஸ் உத்தியோகஸ்த்தர்கள் படுகாயமடைந்துள்ளனர். 

இந்த சம்பவம் ஹக்மன கொங்கல பகுதியில் இடம்பெற்றுள்ளது. இதன்போது 36 வயதான பொலிஸ்  உத்தியோகஸ்த்தர் ஒருவரே உயிரிழந்துள்ளார். இதேவேளை மிகை வேகமாக வந்த டிப்பர் வாகனம் பொலிஸ் சோதனை சாவடியை மோதி தள்ளிவிட்டு 

அங்கிருந்து தப்பி சென்றுள்ளதாக பொலிஸ் விசாரணைகளில் தொியவந்துள்ளது. இந்நிலையில் குறித்த டிப்பர் வாகனத்தை தேடும் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு