இன்று மட்டும் 25 பேருக்கு தொற்று..! 2642 ஆக உயர்ந்தது மொத்த எண்ணிக்கை..

ஆசிரியர் - Editor I
இன்று மட்டும் 25 பேருக்கு தொற்று..! 2642 ஆக உயர்ந்தது மொத்த எண்ணிக்கை..

இலங்கையில் கொரொனா தொற்றுக்குள்ளான மேலும் 11 பேர் அடையாளம் காணப்பட்டிருக்கும் நிலையில் இன்று மட்டும் அடையாளம் காணப்பட்டவர்கள் எண்ணிக்கை 25 ஆக உயர்ந்திருப்பதுடன், மொத்தம் 2642 ஆக உயர்ந்துள்ளது. 

இவ்வாறு இனங்காணப்பட்டவர்கள் அனைவரும், சேனாபுர புனர்வாழ்வு நிலையத்தில் உள்ளவர்கள் என அரச தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.இதனையடுத்து நாட்டில் கொரோனா தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 2642ஆக உயர்ந்துள்ளது.

தற்போது நாடு முழுவதும் உள்ள வைத்தியசாலைகளில் 650 கொரோனா தொற்றாளர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். அதேநேரம் கொரோனா தொற்று சந்தேகத்தின்பேரில் 112 பேர் வைத்தியக் கண்காணிப்பிலும் உள்ளனர்.

இதேவேளை கொரோனா தொற்றுக்குள்ளான 1,981 பேர் குணமடைந்தும், 11 பேர் உயிரிழந்தும் உள்ளமை குறிப்பிடத்தக்கது.


காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு