பொலனறுவையில் இருந்து வந்தவருக்கு கொரோனா தொற்றா..? யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதி..

ஆசிரியர் - Editor I
பொலனறுவையில் இருந்து வந்தவருக்கு கொரோனா தொற்றா..? யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதி..

பொலனறுவை பகுதியில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு தொழில் நிமித்தம் வந்த ஒருவர் கொரோனா தொற்று அறிகுறிகளுடன் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றார். 

யாழ்.எழுவைதீவில் நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபையின் பணியில் ஈடுபட்டிருந்த ஒருவரே வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் கடந்த சனிக்கிழமையே பொலன்னறுவையிலிருந்து யாழ்ப்பாணம் வந்திருந்தார்.

கொரோனா அறிகுறிகளுடன் எழுவைதீவு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர், தற்போது அவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரிடம் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு, 

இன்று இரவு பரிசோதனை முடிவு வெளியாகும். பரிசோதனை முடிவுகள் வெளியாகும் வரை அவருடன் தொடர்புடையவர்கள் எழுவை தீவில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு