வீட்டுக்குள் நுழைந்ததற்காக அயல் வீட்டு நாயை சுட்டுக் கொன்ற கிராமசேவகருக்கு சிக்கல்..! வவுனியாவில் இன்று சம்பவம்..

ஆசிரியர் - Editor I
வீட்டுக்குள் நுழைந்ததற்காக அயல் வீட்டு நாயை சுட்டுக் கொன்ற கிராமசேவகருக்கு சிக்கல்..! வவுனியாவில் இன்று சம்பவம்..

வீட்டுக்குள் புகுந்துவிட்டதென்பதற்காக நாயை சுட்டுக் கொலை செய்த சம்பவம் குறித்து வவுனியா- செட்டிகுளம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. 

செட்டிகுளம்- கங்கன்குளம் 2ம் பாம் பகுதியில் உள்ள கிராம சேவகர் ஒருவர் தனது வீட்டுக்குள் நுழைந்தற்காக அயல் வீட்டு நாயை காற்று துப்பாக்கியால் சுட்டு கொலை செய்துள்ளதாக

நாயின் உரிமையாளர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளார். இவ்விடயம் குறித்து மேலும் தெரியவருகையில், 

இன்று பிற்பகல் வவுனியா செட்டிகுளம் கங்கன்குளம் 2 ஆம் பாம் வீதியிலுள்ள கிராம அலுவலகரின் வீட்டிற்குள் புகுந்த பக்கத்துவீட்டு உறவினரின் நாய் மீது 

காற்று  துப்பாக்கியை பயன்படுத்தி துப்பாக்கிச்சூடு மேற்கொண்டதாகவும் இதனால் குறித்த நாய்க்கு வலிப்பு ஏற்பட்டு சம்பவ இடத்தில் துடிதுடித்து உயிரிழந்துவிட்டதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் குறித்த கிராம அலுவலர் காற்று துப்பாக்கி வைத்திருப்பதாகவும் அதனைப்பயன்படுத்தி நாய் மீது துப்பாக்கி சூடு நடத்தியுள்ளதாக 

வளர்ப்பு நாயின் உரிமையாளர் செட்டிகுளம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்றினை மேற்கொண்டுள்ளார்.

இவ்விடம் குறித்து செட்டிகுளம் பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு