சிறப்பு பணிக்குழு, வல்லுனர்கள், திணைக்களங்கள், படையினர் தயார் நிலையில்..! எந்தவேளையிலும் அவைகள் நாட்டுக்குள் நுழையலாம் என்கிறது விவசாய திணைக்களம்..

ஆசிரியர் - Editor I
சிறப்பு பணிக்குழு, வல்லுனர்கள், திணைக்களங்கள், படையினர் தயார் நிலையில்..! எந்தவேளையிலும் அவைகள் நாட்டுக்குள் நுழையலாம் என்கிறது விவசாய திணைக்களம்..

இந்தியாவின் வடக்கு பகுதி வழியாக நுழைந்துள்ள பாலைவன வெட்டுக்கிளிகளின் தாக்கம் தெற்கு பகுதியிலும் உணரப்பட்டிருக்கும் நிலையில், அவை இலங்கையையும் தாக்கலாம் என கூறியிருக்கும் விவசாய திணைக்கள பணிப்பாளர் நாயகம் W.M.W.வீரகோன்,

தாக்குதல் இடம்பெற்றாது. என கூற முடியாது. இடம்பெற்றால் அதனை சமாளிப்பதற்குத் தேவையான சகல பாதுகாப்பு ஒழுங்குகளும் செய்யப்படுவதாகவும், திணைக்களங்கள் தயார்படுத்தப்பட்டிருப்பதாகவும் அவர் கூறியிருக்கின்றார். 

ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இதனை கூறியிருக்கின்றார். இது குறித்து மேலும் அவர் கூறுகையில், வட இந்தியாவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள பாலைவன வெட்டுக்கிளிகள் தற்போது பாகிஸ்தானை நோக்கி படையெடுத்துள்ளது. 

இந்நிலையில், பாலைவன வெட்டுக்கிளிகளின் தாக்கம் இலங்கையில் ஏற்பட கூடிய சாத்தியம் இருப்பதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இது குறித்து தொடர்ந்தும் பேசிய அவர்,விவசாய அமைச்சு உள்ளிட்ட திணைக்களம் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்கின்றது, 

அச்சுறுத்தலை சமாளிக்க செயற்திட்டத்தை கொண்டு வர பணிக்குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது. பூச்சியியல் வல்லுநர்கள், பயிர் வல்லுநர்கள் மற்றும் பிராந்திய வேளாண்மை இயக்குநர்கள் அடங்கிய பணிக்குழு விவசாயிகளுக்கு 

விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றது.அவர்கள் தங்கள் வயல்களில் வெட்டுக்கிளிகளைக் கண்டால் அதிகாரிகளுக்குத் தெரிவிக்குமாறு அறிவுறுத்துவதாகவும் அவர் கூறியுள்ளார்.வெட்டுக்கிளி படையெடுப்பை கட்டுப்படுத்த தேவையான 

பூச்சிக்கொல்லிகள் மற்றும் இரசாயனங்களை அடையாளம் காணவும் பணிக்குழுக்கு அறிவுறுத்தப்பட்டது.எவ்வாறாயினும், தேவை ஏற்பட்டால் அவர்கள் பாதுகாப்புப் படையினரின் உதவியையும் நாடுவார்கள் என அவர் மேலும் கூறியுள்ளார்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு