யாழ்.தேசிய கல்வியற் கல்லுாரியின் மாணவர் விடுதிகள் இராணுவத்திடம்..! இராணுவத்திற்கான தனிமைப்படுத்தல் நிலையமாக மாற்றப்படுகிறது..

ஆசிரியர் - Editor I
யாழ்.தேசிய கல்வியற் கல்லுாரியின் மாணவர் விடுதிகள் இராணுவத்திடம்..! இராணுவத்திற்கான தனிமைப்படுத்தல் நிலையமாக மாற்றப்படுகிறது..

யாழ்.கோப்பாய் தேசிய கல்வியற் கல்லுாரி இராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்டிருக்கும் நிலையில், அங்கு இராணுவத்தினரை தனிமைப்படுத்தலுக்குட்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கின்றது. 

அந்தக் கல்லூரியின் மாணவர் விடுதிகள் இராணுவத்தினரால் கோரப்பட்டதையடுத்து வழங்கப்பட்டுள்ளது.கோப்பாய் தேசிய கல்வியற் கல்லூரியின் கல்வி நடவடிக்கைகள் கடந்த மார்ச் மாதம் 16ஆம் திகதியுடன் 

இடைநிறுத்தப்பட்ட நிலையில் விடுதிகளில் தங்கியிருந்த மாணவர்கள் வீடு திரும்பினர்.இந்த நிலையில் முப்படையினரை தனிமைப்படுத்துவதற்கான தனிமைப்படுத்தல் நிலையம் அமைக்கப்படவுள்ளது. 

விடுவிப்பில் வீடு திரும்பிய நிலையில் உள்ள படையினரை மீளவும் கடமைக்குத் திரும்புமாறு அழைக்கப்பட்டுள்ள நிலையில் இந்த தனிமைப்படுத்தல் பணி நாளை ஆரம்பிக்கப்படவுள்ளது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு