யாழ்ப்பாணம் வந்து சென்ற பெண், 2 வாரங்கள் தொடர் காய்ச்சல், வைத்தியசாலையில் சேர்த்து சில நிமிடங்களில் மரணம்..! வவுனியாவில் பரபரப்பு..

ஆசிரியர் - Editor I
யாழ்ப்பாணம் வந்து சென்ற பெண், 2 வாரங்கள் தொடர் காய்ச்சல், வைத்தியசாலையில் சேர்த்து சில நிமிடங்களில் மரணம்..! வவுனியாவில் பரபரப்பு..

வவுனியா வைத்தியசாலையில் வயோதிப பெண் ஒருவர் திடீரென உயிரிழந்த நிலையில் அவருடைய இரத்த மா திரிகள் சேகரிக்கப்பட்டு அனுராதபுரத்திலுள்ள கொரோனா தடுப்பு மையத்திற்கு சோதனைக்காக அனுப்பிவைக்க ப்பட்டிருப்பதாக வைத்தியசாலை தகவல்கள் தொிவிக்கின்றன. 

வவுனியா -சிதம்பரபுரம், கற்குளம் என்ற முகவரியைச் சேர்ந்த வயோதிபப் பெண் மணி ஒருவர் இரண்டுவாரங்கள் தொடர்ந்து காய்ச்சலால் அவதிப்பட்டுள்ளார். இதனையடுத்து உறவினர்களால் நேற்று இரவு வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அனுமதித்தவர்களிடம் மருத்துவர்கள் விசாரித்ததன் அடிப்படையில்,குறித்த பெண்மணி காய்ச்சல் வருவதற்கு முன்பாக யாழ்ப்பாணம் சென்று வந்ததாகவும் இரண்டு வாரங்கள் தொடர்ந்து காய்ச்சலால் அவதிப்பட்டதாகவும் தெரிவித்திருக்கின்றனர். அவரின் நோய் அறிகுறிகளை விசாரித்த மருத்துவர்கள் 

கொரொனா தொற்றாக இருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் கொரோனா தடுப்பு விடுதிக்கு அவரை மாற்றி சிறிது நேரத்தில் அவர் உயிரிழந்துள்ளார்.சம்பவத்தை அடுத்து குறித்த பெண்ணின் இரத்த மாதிரிகள் அனுராதபுரம் வைத்தியசாலைக்கு பரிசோதனைகளுக்காக அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாகவும் 

அங்கிருந்து மருத்துவ அறிக்கை கிடைக்கப்பெற்றதுமே மரணம் நிகழ்ந்தமைக்கான காரணம் தெரியவரும் என்றும் வவுனியா பொது வைத்தியசாலை வட்டாரங்கள் எமது செய்தியாளரிடம் தெரிவித்தன.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு