மன்னார் - திருக்கேதீஸ்வர வீதி வளைவுக்கு தடை - வவுனியாவில் நாளை கண்டனப் பேரணி!

ஆசிரியர் - Admin
மன்னார் - திருக்கேதீஸ்வர வீதி வளைவுக்கு தடை - வவுனியாவில் நாளை கண்டனப் பேரணி!

மன்னார் - திருக்கேதீஸ்வர வீதி வளைவை மீண்டும் அமைப்பதற்கு இடைக்கால தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதைக் கண்டித்து கண்டனப் பேரணி ஒன்று வவுனியாவில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

வவுனியா இந்து ஆலயங்களின் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் நாளை வெள்ளிக்கிழமை காலை 9 மணிக்கு வவுனியா கந்தசாமி கோயில் முன்றலில் கண்டனப் பேரணி ஆரம்பமாகவுள்ளது.

இப்பேரணியானது வவுனியா மாவட்ட செயலகத்தினை சென்றடைந்து அங்கு மகஜரொன்றும் கையளிக்கப்படவுள்ளது.

திருக்கேதீஸ்வர ஆலயத்தினுடைய தோரண நுழைவாயில் அமைப்பதற்கான அனுமதி பல்வேறு இழுத்தடிப்புகளுக்கு மத்தியில் மன்னார் பிரதேச சபையினால் வழங்கப்பட்டது. 

ஆனால் கடிதம் வழங்கப்பட்டு ஒரு சில நாட்களில் குறித்த அனுமதி மீண்டும் இரத்துச் செய்யப்படுவதாக மன்னார் பிரதேச சபையினுடைய தலைவரின் ஒப்பத்துடன் கடிதம் அனுப்பி வைக்கப்பட்டிருந்தது. 

இதற்கு மன்னார் மாவட்ட இந்து குருமார் பேரவை கண்டனம் தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு