முஸ்லிம் மக்களால் அடித்து விரட்டப்பட்ட தௌஹீத் ஜமாத் அமைப்பினா்..!

ஆசிரியர் - Editor I
முஸ்லிம் மக்களால் அடித்து விரட்டப்பட்ட தௌஹீத் ஜமாத் அமைப்பினா்..!

தடைசெய்யப்பட்ட தீவிரவாத அமைப்பான தௌஹீத் ஜமாத் அமைப்பினரை மாத்தளை முஸ்லிம் மக்கள் அடித்து விரட்டியுள்ளனா். 

வரகாமுர பிரதேசத்திலுள்ள தவ்ஹித் ஜமாத் அமைப்பின் அலுவலகத்திற்கு முன்னால் இந்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

சம்பவம் இடம்பெற்ற சந்தர்ப்பத்தில் தவ்ஹித் அமைப்பின் மாத்தளை அமைப்பாளர்களாக கருதுப்படும் நபர்கள், குடும்ப உறுப்பினர்களுடன் அங்கு ஒன்று கூடியுள்ளனர்.

நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையை அடுத்து மத தலைவர்களின் ஆலோசனைக்கிணங்க பெண்களுக்கான தொழுகைகள் தவிர்க்கப்பட்டு வருகின்றன.

எனினும் நேற்றிரவு தவ்ஹித் ஜமாத் அமைப்பினர் பெண்களுக்கான தொழுகையை ஏற்பாடு செய்யும்போது அந்த பகுதி முஸ்லிம் மக்கள் அதனை தவிர்க்குமாறு கேட்டுள்ளனர்.

இதன் காரணமாக இருதரப்புக்கும் இடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் வன்முறையாக மாறியிருந்தது. உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸார் இரண்டு தரப்பினரையும் 

அங்கிருந்து அனுப்புவதற்கு நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். அத்துடன் பிரதேசத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் மாத்தளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு